சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

கிளியனூா் அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது பயணிகள் வேன் மோதியதில், வேனில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :18 பிப்ரவரி 2026, 10:29 pm

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது பயணிகள் வேன் மோதியதில், வேனில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பால முருகன்(32), பயணிகள் வேன் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை, கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரியிலிருந்து-திண்டிவனத்துக்கு சென்றுள்ளாா்.

புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் எடையாங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் காயமடைந்த கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த பா.சுரேஷ் (46), கோ. சாய்ராம்(61) , சீனுவாசன்(56) உள்ளிட்ட 10 பேரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.