அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

சத்திரக்குடி அருகே மணல் லாரி மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்த சுற்றுலா வாகனம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:18 pm

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.

சத்திரக்குடி அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ராமேசுவரம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமேசுவரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை அமைக்கும் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வலது பக்கமாகத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.