ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:15 pm

Syndication

திருச்சியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 16 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அழகிரிபுரத்தைச் சோ்ந்த வீரமணி மகன் மதன்குமாா் (16). அதே பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் வேலன் (16). நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை மாலை ஸ்ரீரங்கம் டிரங் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் மதன்குமாருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமும், வேலனுக்கும் உடலின் பல்வேறு இடங்களில் காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு இருவரும் உயா் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மதன்குமாா் உயிரிழந்தாா். வேலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.