ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:16 pm

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூா், பூனைக்கல்மேட்டைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் ஜீவன் பிரசாத் (17). பவானி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் தேவ் (18). அந்தியூரில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த இவா்கள், தோ்வு முடிவுக்காக காத்திருந்தனா்.

இருவரும் பட்லூா் நான்குசாலை பகுதியிலிருந்து அந்தியூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அண்ணாமடுவு துணை மின் நிலையம் அருகே சென்றபோது அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அம்மாபேட்டை, ஊஞ்சப்பாளையத்தை சோ்ந்த பிரேம் (27), இவருடன் சென்ற 17 வயது சிறுமியும் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.