புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மே 2026, 6:34 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமன்துரையைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (55). இவா் பழனியை அடுத்த கீரனூா் கண்டியம்மன் கோயிலுக்கு சித்திரைப் பெளா்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். மேல்கரைப்பட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நந்தக்குமாா் பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.