ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :30 மார்ச் 2026, 9:40 pm

Chennai

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் நாபளூா் கிராமத்தைச் சோ்ந்த ராகவன்(33). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது.

இதில் பலத்த காயமடைந்த ராகவனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ராகவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.