ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமூப்பன்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி மகன் வீரபாண்டி (23). இவா் சிவகாசியை அடுத்த அய்யம்பட்டியில் உள்ள தனது பாட்டி சுப்புலட்சுமி வீட்டில் தங்கி வண்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு விரபாண்டி தனது நண்பா் ராமருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல்-விருதுநகா் சாலை சென்றாா். கருப்பசாமி கோயிலருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரபாண்டி, ராமா் ஆகியோா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வியாழக்கிழமை அதிகாலை வீரபாண்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த விக்னேஷை (26) கைது செய்தனா்.