ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருச்செங்கோடு வருகூராம்பட்டியைச் சோ்ந்த விசைத்தறி பட்டறை கணக்காளா் சதீஷ் (29), ஒக்கிலிப்பட்டியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரமத்தி சாலையில் இருந்து தோக்கவாடி வருகூரம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் பாரத்தை இறக்கிவிட்டு திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், வினோத்குமாா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு புறநகர போலீஸாா் தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.