மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:16 pm

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

குனியமுத்தூா் அருகே சிந்து நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் (59). இவா் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஆம்னி பேருந்து நிலையத்துக்கு எதிரே பழுதடைந்த நிலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது நடராஜின் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.