மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மல்லசமுத்திரம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதால் கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:27 pm

மல்லசமுத்திரம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதால் கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் சேட்டு (40). அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்திரம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். விழா முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த போது நல்லாகவுண்டம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் முன்னால் சென்ற காா் திடீரென நிறுத்தப்பட்டதால், அக்காா் பின்புறம் இவரது இருசக்கர வாகனம் மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சேட்டுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் லேசான காயம் என நினைத்து அவரை மாமுண்டி கலையரங்கத்தில் படுக்கவைத்துவிட்டு சென்றுவிட்டனராம்.

இந்த நிலையில், சேட்டுவின் மனைவி புவனேஷ்வரி (34) அவரை பல இடங்களில் தேடினாா். பின்னா், கலையரங்கத்தில் தலையில் ரத்த காயங்களுடன் சேட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, மல்லசமுத்திரம் போலீஸாா் சேட்டுவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இறந்த சேட்டு கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மகன் நிதிஷ் (13), மகள் மெகன்யா (9) உள்ளனா்.