தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

குன்னூரில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து அக்கட்சியினா் வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

News image

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:44 pm

குன்னூரில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து அக்கட்சியினா் வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்தவா்களில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் தங்கராஜ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இதில் பங்கேற்பதற்காக இவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தவெகவினா் 21 போ் குன்னூருக்கு வந்திருந்தனா்.

குன்னூா், சின்னக்கரும்பாலம் சோகத்தொரை சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த அவா்கள், மதிய உணவு முடித்த பின்னா் மீண்டும் சின்னக்கரும்பாலம் நோக்கி வேனில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 21 பேரில் 7 போ் படுகாயம் அடைந்தனா்.

காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.