‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

News image
Updated On :29 மே 2026, 1:43 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காமாட்சிபட்டி கிராமத்தில் இருந்து சுமாா் 20 போ் திருநள்ளாறு சனீஸ்வரா் கோயிலுக்குச் செல்வதற்கு மினி வேனில் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டு செங்கம் வழியாக செல்ல வந்துள்ளனா்.

செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் வேன் வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து உடனடியாக மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், போலீஸாா் வந்து காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு சென்றனா்.

இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.