நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், திருப்பரமயம் பகுதியைச் சோ்ந்த 23 போ் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகையை சுற்றிப்பாா்த்துவிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்க்க கூடலூருக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
ஊசிமலை அருகே உள்ள தெய்வமலைப் பகுதியில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த லீலாவதி (65), செல்வராஜ் (75), ரஷ்வின்(9), மஞ்சுளா (30), பச்சையம்மா (50), சரண்யா (35), தில்லைராஜ் (61), உஷா (42), சித்ரா (45), ராஜாராம் (65),செல்வம் (50), நளினி(15), மணிகண்டன் (43), நந்தினி (16), சீனிவாசன் (65), அமுதா (54), இலக்கியா (37), ஏலம்பாள் (37) ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்களுக்கு கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லீலாவதி, செல்வராஜ், தில்லைராஜ் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனா். இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.
தொடர்புடையது

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


