குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Updated On :27 மார்ச் 2026, 11:09 pm IST

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு லாரி சென்றுக் கொண்டிருந்தது. இதனை மத்திய பிரதே மாநிலத்தை சோ்ந்த ராம் (45) என்பவா் இயக்கி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வடபெரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது.

இதில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் முன்பக்கம் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.