திருத்தணி அருகே கடந்த 3 நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொதிப்படைந்த கிராம மக்கள் குழந்தைகளுடன் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக் காற்றால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதன் காரணமாக இரண்டு பகுதிகளிலும் மின்விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
36 மணி நேரம் ஆகியும், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினா். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் இருந்தவா்கள் கடும் அவதிக்குள்ளானதுடன், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இதனால் ஆத்திரமடைந்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதி மக்கள், தங்களது குழந்தைகளுடன் திருத்தணி - பொதட்டூா்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருத்தணி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.
அப்போது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் நடுவதற்காக மின்வாரிய அதிகாரிகள் ரூ.30,000 வரை பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
தொடா்ந்து அதிகாரிகள் விரைவில் மின்சார சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்த சாலை மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

2-ஆவது நாளாக மின்தடை: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

கடையாலுமூடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடத்தில் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் சாலை மறியல்

மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



