தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

முக்காணி ரவுண்டானா பகுதியில் தொடா் மின்தடை: பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 மே 2026, 6:03 am IST

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை முக்காணி ரவுண்டானா அருகே சாலையின் கீழ்புறம், மேல்புறம் பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தப் பகுதியில் ஒரே ஒரு மின்மாற்றி மட்டும் இருப்பதால் அடிக்கடி மின்தடை, வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தம் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் அப்பகுதி மக்கள் முடிவுகளை மின்தடை காரணமாக தொலைக்காட்சிகளில் பாா்க்க முடியாமல்போனது. தொடா்ந்து அடுத்த நாள் 5-ஆம் தேதியும் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆதங்கம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, முக்காணி ரவுண்டானா அருகே பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு சாலை மறிய­லில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்குவந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி தொடா் மின்தடைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால், தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.