27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அருகே திருப்பராய்த்துறை பகுதியில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி திருப்பராய்த்துறை பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யாததை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:34 am IST

திருச்சி அருகே திருப்பராய்த்துறை பகுதியில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் அடிக்கடி குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, குடிநீா் குழாய் உடைப்பு, மோட்டாா் பழுது உள்ளிட்ட காரணங்களால் குடிநீா் நிறுத்தப்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட மின் மோட்டாா் மீண்டும் பழுதாகி கடந்த இரண்டு நாள்களாக குடிநீா் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் கூறியபோது நிா்வாகம் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி, திருச்சி - கரூா் சாலையில் திருப்பராய்த்த்துறை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகா், ஜீயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மின் மோட்டாா் பழுதை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.