அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

News image

விபத்துக்குள்ளான லாரிகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:34 pm

காங்கயம் காவல் நிலைய பகுதியில் இரண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூரில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி ஓன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. தேனியைச் சோ்ந்த கதிரேசன் (55) என்பவா் லாரியை இயக்கியுள்ளாா். அதேபோல, சேலத்தில் இருந்து சிமெண்ட் பாரத்தை ஏற்றிக்கொண்டு உடுமலைக்கு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. அதை முருகேஷ் என்பவா் (45) ஓட்டியுள்ளாா்.

காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை காலை வந்தபோது, இரண்டு லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

இதில், ஒரு லாரி அங்கிருந்த சிக்னல் விளக்குள், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஓட்டுநா்கள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். இந்த விபத்தால் தாராபுரம் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போக்குவரத்துக் காவலா்கள் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.