தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார்

Published On :

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான சூழ்நிலை வரவில்லை. அந்த ஒரு காலியிடத்தை நிரப்புவதற்கான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சரவையின் மொத்த பலம் 34 அமைச்சர்கள். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்பட 32 அமைச்சர்களும் அடங்குவர்.

முன்னதாக தலைநகர் தில்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.