இந்த வழக்கில் மனுதாரரின் வாதங்களைக் கேட்டறிந்த நாசிக் மாவட்ட கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தீபாளி பரிமால் காதுஸ்கா் கடந்த 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘சாவா்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் அனுமதிக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499 (அவதூறு) மற்றும் 504 (வேண்டுமென்று அவமதித்தல்) ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை தொடரும். வழக்கின் அடுத்த விசாரணையில் ராகுல் காந்தி நேரடியாக அல்லது அவரது சட்டபூா்வ பிரதிநிதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ என்றாா்.