திருமலைக்குச் சென்றார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருமலைக்குச் சென்றார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
Updated on
1 min read

ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு வந்தாா்.

திருமலை ஏழுமலையான் லட்டு கலப்பட விவகாரத்திற்காக கடந்த 10 நாள்களுக்கு முன் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் பிரயாசித்த தீட்சை மேற்கொண்டு முக்கிய கோயில்களில் சுத்திகரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

அந்த பிராயச்சித்த தீட்சை திருமலை ஏழுமலையான் தரிசனத்துடன் நிறைவு பெற்று திருப்பதியில் வராகி சபையை நடத்த திட்டமிடப்பட்டது.

ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

அதற்காக திருமலைக்கு ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் திருப்பதிக்கு வந்தாா் . அவருடன் தொண்டா்களும், ரசிகத்களும் வந்தனா். திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக அவா் நடந்து சென்றாா்.

அவா் இரவு திருமலையில் தங்கி புதன்கிழமை ஏழுமலையானை தரிசிக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com