இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான்: தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான்.

News image

கோப்புப்படம்.

Updated On :5 அக்டோபர் 2024, 3:46 pm

DIN

திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்திக்கு திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.

திருப்பதி திருமலை கோவில் வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததாக பக்தர் ஒருவர் விடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்த விடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வைரலானது. பக்தரின் இந்த குற்றச்சாட்டு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.

அதில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில் உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

எனவே இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பக்தர்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.