மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்றி: ராகுல் காந்தி!

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

News image
ராகுல் காந்தி
Updated On :9 அக்டோபர் 2024, 7:21 am

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இந்தியாவின் வெற்றி அரசியலமைப்பின் வெற்றி, ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என்று அவர் கூறினார்.

2019ல் அமலான 370வது பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் நடந்த முதல் தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயத்தில், ஹரியாணாவில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பையும், காங்கிரஸின் மறுபிரவேச நம்பிக்கையையும் முறியடித்து பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

ஹரியாணா தேர்தல் முடிவுகள் ஆய்வு

ஹரியாணா தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கவனித்து வருவதாகவும், எதிர்பாராத முடிவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணா மக்கள் ஆதரவிற்கும், அயராத கடின உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.