ஹரியாணாவில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், தசரா விழாவையொட்டி நடந்த பாபா ராஜ்புரி மேளாவில் கலந்துகொள்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட ஒன்பது பேர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார் முந்திரி கிராமத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஓட்டுனர் காப்பாற்றப்பட்டதாகவும், ஆனால் வாகனத்தில் இருந்த ஏழு பேர் நீரில் மூழ்கி பலியானதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கோமல் என்ற 12 வயது சிறுமி காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் கூறினர்.
பலியானவர்கள் சத்விந்தர் (50), சமேலி (65), தீஜோ (45), ஃபிசா (16), வந்தனா (10), ரியா (10), ராமன்தீப் (6) என அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் கைதலில் உள்ள டீக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த விபத்து இதயத்தை உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் உதவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



