மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாக்களிப்பது எப்படி? தொகுதிவாரியாக விழிப்புணர்வு வாகனங்கள்!

வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.

News image
விழிப்புணர்வு வாகனங்கள்- ANI
Updated On :23 அக்டோபர் 2024, 1:08 pm

DIN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தில்லியில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு வாகனங்களை அனுப்பி, வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திலுள்ள 70 தொகுதிகளுக்கும் 70 வாகனங்கள் அனுப்பப்படவுள்ளன.

மொபைல் வேன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.

இது குறித்து பேசிய தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் உள்ள அடிப்படை அம்சங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இவிஎம்-மில் வாக்களிக்கும் முறைகள் விளக்கப்பட்டு, விவிபேட் இயந்திரத்தில் அதனை உறுதிப்படுத்துவது என படிப்படியாக எடுத்துரைக்கப்படும்.

இந்த முயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படும். இந்த வாய்ப்பை தில்லி மக்கள் தவறாது பயன்படுத்திக்கொண்டு, முறையாகத் தெரியாததால், வாக்களிப்பதற்கு ஆகும் நேர விரயத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.