ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் பலி: சித்தராமையா

பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு..

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா
Updated On :26 அக்டோபர் 2024, 11:34 am

பிடிஐ

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது,

மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கமாகப் பதிவாகும் மழை அளவு 852 மி.மீ அளவை விட, இம்முறை 978 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. பருவமழை காலத்திலும் 15 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாநிலத்தில் சராசரியாக 181 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக 114 மி.மீ ஆகும். மாநிலத்தில் 58 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

பருவமழையினால் பெய்த கனமழையால் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

84 வீடுகள் முழுமையாகவும், 2,077 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் இழப்பீடும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மொத்தம் 74,993 ஹெக்டேர் விவசாய பயிர் சேதமும், 30,941 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,05,937 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மழையால் மாநிலத்தில் 1.06 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகியுள்ளன.

மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 895 ஆகும். 62 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், தற்போதைய நீர் இருப்பு 871.26 டிஎம்சியாகவும் உள்ளது.

பெங்களூருவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 275 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது மூன்றாவது அதிக மழைப்பொழிவாகும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.