விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 8 பேர் ஆயுதங்களுடன் கைது!

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

Updated On :29 அக்டோபர் 2024, 6:50 am

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முண்னணியைச் (பம்பேய்) சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் மாநில தௌபால் மாவட்டத்தில் எல்லைப் பிரிக்கும் செயல்முறையைத் தடுத்து நிறுத்த முயன்ற ஐக்கிய விடுதலை முண்னணியைச் (பம்பேய்) சேர்ந்த 8 நபர்கள் நேற்று காலவ்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 3 ஏகே 47 ரைஃபில்கள், 2 ஏகே 56 ரைஃபில்கள், 1 பிஸ்டல், 147 ஏகே 47 துப்பாக்கி குண்டுகள், 20 எம்-16 துப்பாக்கி குண்டுகள், 25 பிஸ்டல் குண்டுகள், வெடிமருந்துகள், 16 கைப்பேசிகள், 1 எஸ்யூவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் குழுவினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கடந்தாண்டு மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, இம்பால் மேற்கில் உள்ள டாப் லீராக் மச்சின் பகுதியில் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (அக். 28) போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர் இம்பால் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.