ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அதானி விண்ணப்பத்தை நிராகரித்த கல்லூரி; சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவம்

அதானியின் விண்ணப்பத்தை நிராகரித்த மும்பை கல்லூரி 40 ஆண்டுகளுக்குப்பின் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவம் செய்தது.

News image

கௌதம் அதானி - கோப்புப்படம்

Updated On :6 செப்டம்பர் 2024, 1:19 pm IST

மும்பையில் உள்ள ஒரு கல்லூரி, தொழிலதிபர் கௌதம் அதானியின் விண்ணப்பித்தை நிராகரித்துவிட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் அதே கல்லூரி அதானியை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்துள்ளது.

மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர, அதானி விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டதால், அவர் படிப்பைத் தொடராமல், தொழில் தொடங்கினார். அவர் பல்வேறு தொழில்களை படிப்படியாக விரிவுபடுத்தி இன்று நாட்டின் மிகப்பெரிய பணக்காரராகவும், முன்னணி தொழிலதிபராகவும் மாறியிருக்கிறார்.

கல்லூரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பின், அதே கல்லூரியில் தற்போது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கௌதம் அதானி, தனது 16வது வயதில், மும்பைக்கு வந்து, வைரக் கற்களை வரிசைப்படுத்தும் பகுதிநேர தொழிலில் ஈடுபட்டார். அதேவேளையில், 1977 அல்லது 78ஆம் ஆண்டு மும்பையில் இருந்த ஜெய் ஹிந்த் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் விக்ரம் நன்கானி தெரிவித்தார். அவர் கல்லூரியில் உரையாற்றும் முன்பு, நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் இங்குதான் படித்தார். அதனால், அதானியும் இங்கு விண்ணப்பித்திருந்தார். நல்வாய்ப்பாக அல்லது துரதிருஷ்டமாக கல்லூரி நிர்வாகம், அதானியின் விண்ணப்பத்தை ஏற்கவில்லை. அதனால் அவர் முழு நேரம் தொழிலில் ஈடுபட்டார். பல்வேறு தொழில்களைக் கற்றுக்கொண்டார். அவர் இந்த கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததன் மூலம், அவரும் மிகச் சிறந்த முன்னாள் மாணவர்தான் என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

1998ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு அவருக்கு அனைத்துமே வளர்ச்சிதான். கடந்த 25 ஆண்டுகளில், அவர் துறைமுகங்கள், சுரங்கங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, எரிவாயு, சிமெண்ட், ஊடகம் என தனது வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றும், தடைக்கற்களை உடைத்தெறிந்து, மாணவர்கள் வெற்றியை அடைய வேண்டும் என பேசிய விக்ரம், கௌதம் அதானி, அவருக்கான தடையை 16 வயதில் உடைத்தெறிந்திருக்கிறார் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.