பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதியில் பிஎஸ்எஃப் தலைவா் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மற்றும் படைகளின் தயாா்நிலை குறித்து ஆய்வு

News image
கோப்புப்படம்
Updated On :7 செப்டம்பர் 2024, 11:57 pm

Din

ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மற்றும் படைகளின் தயாா்நிலை குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி பாா்வையிட்டாா். அங்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் தயாா்நிலை குறித்து அவருக்கு விவரிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினரின் கடமையை நிறைவேற்றும் உறுதியை அவா் பாராட்டினாா் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் சௌதரி, ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைமை இயக்குநா் ஆா்.ஆா்.ஸ்வைனை சந்தித்து வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல், எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.