நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இணையப் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது: அமித் ஷா

இணையப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

News image

அமித் ஷா

Updated On :10 செப்டம்பர் 2024, 2:06 pm IST

இணையப் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது: அமித் ஷா

இணையப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்புக்கு எல்லையில்லை என்றும் அச்சுறுத்தலைச் சமளிக்க அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைவது அவசியமென்றும் அவர் கூறினார்.

இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவனத் தின விழாவில் அமித் ஷா உரையாற்றினார். அவர் உரையில் கூறியதாவது,

இணையப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது என்பதால் இணையப் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் இணையப் பாதுகாப்புகளைச் சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்ப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இணையப் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உலகின் 46 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

நாட்டில் சைபர் குற்றம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணத் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2018இல் உருவாக்கப்பட்டது, இது சட்ட அமலாக்க முகமைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.