நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பிரதமர் மோடி 74-வது பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4000 கிலோ சைவ விருந்து!

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அஜ்மீர் தர்காவில் சைவ சமபந்தி விருந்து வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:03 pm

பிரதமர் நரேந்திர மோடியில் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் லங்கர் என்றழைக்கப்படும் 4000 கிலோ சைவ சமபந்தி விருந்து அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது நல்வாழ்வுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படவுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள்

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் செப்டம்பர் 17-ஆம் தேதி 4000 கிலோ சைவ லங்கார் என்றழைக்கப்படும் சைவ சமபந்தி உணவு விநியோகம் செய்யப்படவுள்ளது.

சைவ சமபந்தி உணவு

இதுபற்றி தர்காவில் உள்ள சையத் அஃப்ஷான் சிஷ்டி கூறுகையில், “லாங்கரில் அரிசி, சுத்தமான நெய், உலர்ப் பழங்கள் போன்றவைகளுடன் ஹஸ்ரத் குவாஜா மொய்னுதின் சிஷ்டி தர்காவின் 550 ஆண்டுகால பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் புகழ்பெற்ற 'பெரிய ஷாஹி டெக்கில்'( உணவு தயாரிக்கும் உலகில் மிகப்பெரிய பாத்திரம்) லங்கார் தயாரிக்கப்படும். இது ஏராளமான ஆதரவற்றவர்களுக்கு நன்கொடையாகவும் வழங்கப்படும்.

இதுகுறித்து தர்கா அதிகாரிகள் கூறுகையில், இந்த முழு நிகழ்வும் அவர்களின் 'சேவா பக்வாடா' எனப்படும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்காகவும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்யப்படவுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகள் நடத்தப்படும். பிரதமரின் பிறந்தநாளையொட்டி, 4,000 கிலோ சைவ உணவுகளை நாங்கள் தயார் செய்வோம்.

இந்திய சிறுபான்மை மற்றும் சிஷ்டி அறக்கட்டளை ஆகியவை லாங்கர் உணவை ஏற்பாடு செய்யும், மேலும் அனைத்து விருந்தினர்கள் மற்றும் பக்தர்களுக்கு காலையில் சமபந்தி உணவு விநியோகிக்கப்படும்.

இரவு 10:30 மணிக்கு தீப ஒளி காட்டப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களால் 'கவ்வாலிகள்’ என்று கூறப்படும் பக்தி இன்னிசை பாடல்களும் பாடப்படவுள்ளன” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.