நிகழாண்டு இறுதியில் ஜார்க்கண்ட்டில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், ஜமெஷ்ட்பூரிலுள்ள கோபால் மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய பிரதமருக்கு அம்மாநில பாரம்பரியத்தின்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

படம் | பிடிஐ
தொழிற்சாலைகள் அதிகளவில் அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூரில் இன்று(செப்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”ஜார்க்கண்ட்டில் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஈடுபட்டுள்ளது. சுரங்க ஊழல், கனிமவள ஊழல், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஜேஎம்எம்-க்கு விடைகொடுக்க வேண்டிய நேரமிது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்ட்டில் காவலர் தேர்வில் இளம் தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும். ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு, பொய் வழக்குகளைப் பதிந்து பாஜக தலைவர்களை குறிவைக்கிறது. ஜார்க்கண்ட்டில் அரசின் தயவில் சில கும்பல்கள் அரசு வேலைகளை வியாபாரமாக்கி வருகின்றன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! கொந்தளித்த மாணவர்கள்

ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்தி
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! மாணவர்கள் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு!

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! 3 அதிகாரிகள் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு அரசு ஒப்புதல்!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



