டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

"ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறை சாத்தியமற்றது: டி.ராஜா

"ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டமானது பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமற்றது

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா
Updated On :17 செப்டம்பர் 2024, 12:51 am

DIN

புது தில்லி: "ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டமானது பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கடந்த மாதம் நிகழ்த்திய சுதந்திர தின உரையிலும் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்திக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது வெளியாகிய செய்திகள் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக்காலத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய பாஜக கூட்டணி அரசு உறுதியாக இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா அளித்த பேட்டியில், "ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் ஒருபோதும் ஆதரிக்காது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் இதை தெரிவித்துள்ளோம்.

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. நமது நாட்டில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

மக்களவை, சட்டப்பேரவை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் மற்றும் மாநில அரசுகளின் பதவிக்காலம் குறித்து அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. இந்நிலையில், மாநில அரசுகளிடமிருந்து அனைத்து அதிகாரிகளையும் மத்திய அரசு பறித்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் அரசியல் நிர்ணய சபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.