இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு மறைவையொட்டி 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரா.நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராகத் தொடங்கி, கட்சியின் தமிழக மாநிலச் செயலா் பொறுப்புக்கு உயா்ந்தாா். கட்சியின் மத்தியக் கட்டுபாட்டுக் குழுத் தலைவா், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் போன்ற உயா் பொறுப்புகளிலும் அவா் செயல்பட்டாா்.
பொது வாழ்வில் தூய்மை, எளிமை, நோ்மை, தன்னலம் மறுப்பு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து தமிழக மக்களின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றவா்.
வகுப்புவாத, ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி போராடி வந்தவா். அனுபவம் ததும்பி நின்ற மூத்த அரசியல் தலைவரை இழந்து நிற்பது பெரும் துயரமாகும். அவரது மறைவுக்கு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சிக்கொடிகள் அரைக் கம்பத்தில் தாழ்த்தி பறக்கவிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
தொடர்புடையது

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா

பெரம்பலூரில் நல்லகண்ணுக்கு அனைத்துக் கட்சியினா் புகழஞ்சலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


