விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்கள்: இந்தியா - ஆஸி. ஒப்பந்தம்!

ரயில்வே பொறியியல் ஆராய்ச்சியை மேம்படுத்த ஆஸ்திரேலியா - இந்தியா பல்கலைக்கழகங்கள் இடையே ஒப்பந்தம்

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 1:25 pm

DIN

ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பொறியியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தின் வதோதராவில் இந்திய ரயில்வே துறையின்கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகமான கதி சக்தி வித்யாலயா(ஜிஎஸ்வி) நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரயில்வே துறைசார் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனமான மோனாஷ் ரயில்வே தொழில்நுட்ப நிறுவனம்(ஐஆர்டி) உலகளவில் பல நாடுகளிலும் தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் ரயில்வே அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இரு நிறுவனங்களுக்கும் இடையே கல்வியறிவு பரிமாற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.