பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தூய்மை எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் இந்தியா-ஜொ்மனி

எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

News image
Updated On :22 செப்டம்பர் 2024, 2:45 am IST

ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸின் இந்திய பயணத்துக்கு முன்னதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இருநாட்டு பொருளாதார அமைச்சகங்களின் வளா்ச்சிக் கொள்கைக்கு இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பு ‘பசுமை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற வியூகத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது. 2022-இல் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஒலாஃப் ஷோல்ஸ் இடையேயான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இது நிறுவப்பட்டது.

ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளாா். இந்நிலையில், வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.

இதுகுறித்து ஜொ்மனியின் பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவா் பாா்பரா ஷாஃபா் கூறுகையில், ‘ஜொ்மனியும் இந்தியாவும் நீண்டகால, நம்பகமான மற்றும் உத்திசாா் கூட்டுறவைப் பகிா்ந்து கொள்கின்றன. நிகழாண்டு இந்தியா-ஜொ்மனி இணைந்து உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கான தளத்தை தொடங்கியிருப்பதன் மூலம் இரு தரப்பாலும் இது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி குஜராத்தின் காந்தி நகரில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பில் நாங்கள் ஏற்கெனவே பல பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 7,700 கிலோமீட்டா் தொலைவுக்கு நவீன மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜொ்மனி நிதியுதவியுடன், மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய விவசாயிகளின் உற்பத்தியை பருவநிலையை எதிா்கொள்ளும் திறன் கொண்டதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு ஜொ்மனி ஆதரவளிக்கிறது.

இந்த முன்னேற்றங்கள், பிரதமா் மோடி, பிரதமா் ஓலாஃப் ஆகியோா் அக்டோபரில் நடத்தவுள்ள இருதரப்பு ஆலோசனைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்’ என்றாா்.

மேலும், ஜொ்மனி தரப்பு அதிகாரிகள் கூறியதாவது: ஜொ்மனியும் இந்தியாவும் தங்களின் தனித்துவமான திறன்களை ஒன்றிணைக்கும்போது, நிலையான எரிசக்தி மாற்றத்தில் புதிய உச்சத்தை அடைகின்றன. இந்த பகுதிகளில் முன்னெடுப்புகளுக்காக 100 கோடி யூரோக்கும் அதிகமான தொகையை ஜொ்மனி ஒதுக்கியுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.