உத்தர பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்த இரு ரயில்கள் மீது சமூக விரோதிகள் சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வு தொடா்பாக ரயில்வே போலீஸ் படையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தர பிரதேசத்தில் அருகருகே அமைந்துள்ள மிா்ஸாபூா் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் இந்த கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திங்கள்கிழமை மாலை மிா்ஸாபூா் ரயில் நிலையம் அருகே மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது சிலா் சரமாரியாக கற்கைளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ஜன்னலோரம் அமா்ந்திருந்த பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மிா்ஸாபூா் ரயில் நிலையத்தில் அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு 9.45 மணியளவில் தில்லியில் இருந்து வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூகவிரோதிகள் சிலா் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்த காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் ரயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு ரயில்வே காவல் துறையினா் வந்தபோது, கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இந்த கல்வீச்சு சம்பவங்கள் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிரெண்டிங்

தவறான திட்டமிடலால் தடம்புரளும் ரயில் பயணிகள் நிலை! என்னதான் பிரச்னை?

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

சிவாஜி பிறந்தநாள் ஊா்வலத்தில் கல்வீச்சு: பாகல்கோட்டில் பதற்றம்

இலங்கை தமிழா் மறுவாழ்வு மைய கட்டடங்கள் சேதம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

