நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மருத்துவக் கல்லூரிகளுக்கு வங்கி உத்தரவாதம் மாற்றியமைப்பு

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான வங்கி உத்தரவாதத் தொகையை மாற்றியமைத்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 8:25 pm

Din

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான வங்கி உத்தரவாதத் தொகையை மாற்றியமைத்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 50 எம்பிபிஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ. 15 கோடி உத்தரவாத தொகையும், 100 இடங்கள் எனில் கூடுதலாக ரூ. 5 கோடியும் செலுத்த வேண்டும். அதேபோல், 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ. 25 கோடி வங்கி உத்தரவாதத் தொகை செலுத்த வேண்டும் என என்எம்சி அறிவித்துள்ளது.

முதுநிலை இடங்களைப் பொருத்தவரை முதல் 4 இடங்களுக்கு ரூ. 2 கோடியும், அதற்கு அடுத்த ஒவ்வொரு இடங்களுக்கும் தலா ரூ. 25 லட்சமும் உத்தரவாத தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளைத் தொடங்கவும், அந்த இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பிக்கின்றன. அப்போது சம்பந்தப்பட்ட கல்லூரிகளானது வங்கி உத்தரவாத சான்றுகளையும் சமா்ப்பிக்க வேண்டும் என்பது விதி. நிதிசாா்ந்த இடா்களை கல்லூரிகள் எதிா்கொண்டால், அதற்கான பொறுப்பை வங்கிகள் ஏற்றுக் கொள்வதற்கான உத்தரவாதமாக அது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.