எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சட்டப்பேரவை வளாகத்தில் வல்லுறவு! பாஜக எம்எல்ஏ மீதான எஃப்.ஐ.ஆர். விவரம்

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி...

News image

சித்திரப் படம் - TNIE

Updated On :27 செப்டம்பர் 2024, 9:18 am IST

கர்நாடக பாஜக பாஜக எம்எல்ஏ முனிரத்னா, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு அரசு வழங்கிய காரில் வைத்தும் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தை சுத்தம் செய்யும் பரிகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் காவலில் எம்எல்ஏ

கொலை மிரட்டல், ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகரம் அருகே கக்கலிபுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தன்னைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக 40 வயது பெண் செப்.18ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா (60) உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் செளமியா லதா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.

சிறையில் இருந்த முனிரத்னாவை மீண்டும் கைது செய்த சிறப்பு விசாரணைக் குழு, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது.

சட்டப்பேரவைக்குள் வல்லுறவு

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் வைத்தும், அரசு காரில் வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், விடியோ கால் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ள நிலையில், முனிரத்னாவில் செல்போனை கைப்பற்றி சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் எழுப்பியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முனிரத்னா விசாரணையில் மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.