நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டையால் நாடே ஆபத்தில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள இடம் குறித்து காங்கிரஸ் எம்.பி. பேசியுள்ளார்.

News image

பிரமோத் திவாரி

Updated On :10 பிப்ரவரி 2024, 8:34 pm IST

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் உண்மையான ராமஜன்மபூமிக்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ளதாகவும் இது குறித்து ஆய்வு செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட பிரமோத், ஹிந்து மரபுகளின்படி மூலவர் பிரதிஷ்டை நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ராமஜன்ம பூமி எங்குள்ளது என்பதற்கான ஆதராத்தை அவர் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கோயில் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பு பிரதிஷ்டை நடந்ததால் நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் இதுதான் எனவும் அதனாலேயே தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ராமரைத் தேர்தல் வாக்களிக்கும் பெட்டியில் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார் பிரமோத் திவாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.