காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் உண்மையான ராமஜன்மபூமிக்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ளதாகவும் இது குறித்து ஆய்வு செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட பிரமோத், ஹிந்து மரபுகளின்படி மூலவர் பிரதிஷ்டை நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ராமஜன்ம பூமி எங்குள்ளது என்பதற்கான ஆதராத்தை அவர் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோயில் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பு பிரதிஷ்டை நடந்ததால் நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் இதுதான் எனவும் அதனாலேயே தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: பெண்களுக்கான உதவி தொகை 9-வது தவணை விடுவிப்பு
மேலும், ராமரைத் தேர்தல் வாக்களிக்கும் பெட்டியில் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார் பிரமோத் திவாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்






