தில்லி கலால் கொள்ளை வழக்கில் முதல்வர் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சட்டப்பூர்வமான சம்மன் அனுப்பினால் அதற்கு அவர் ஒத்துழைப்பார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர்.
கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்திருந்த நிலையில், 3வது முறையாக சம்மன் அனுப்பியது.
தொடர்ந்து, மூன்றாவது முறையாக நேற்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஜஸ்மின் ஷா கூறுகையில்,
மதுபான ஊழல் தொடர்பான கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் அமலாக்கத்துறையால் சேகரிக்க முடியவில்லை.
மதுபான ஊழல் விசாரணை என்று கூறப்படுவது போலியானது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளை அழைத்தும், 1,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது, ஆனால் இதுவரை ஆதாரமாக 1 ரூபாய் கூட மீட்கப்படவில்லை.
இந்தியப் பேரவையின் உயர்மட்டத் தலைவர்களைக் குறிவைத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கேஜரிவாலைக் கைது செய்து, அவர்களை பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுக்கும் சதி இது என்று அவர் கூறினார்.
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானது என்றால் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜரிவாலும் தயாராக உள்ளனர்
மதுபான ஊழல் வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட முந்தைய இரண்டு சம்பவங்களிலும் இதேபோன்ற முறை காணப்பட்டது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



