பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மக்களவைத் தேர்தல்: ஜெ.பி. நட்டா நாளை ஆலோசனை

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 11:07 am

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

2024 மக்களவைத் தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக-இந்தியா கூட்டணி என இருமுனைப் போட்டியை உறுதி செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது பாஜகவுக்கும் மிகுந்த சவாலாக அமையும் என்று கூறப்படும் நிலையில் பாஜகவின் அனைத்து பிரிவு தலைவர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

முன்னதாக அண்மையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய பொறுப்பாளா்கள் மற்றும் மாநிலத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2019 மக்களவைத் தோ்தலில் பெற்றதைவிட 2024 மக்களவைத் தோ்தலில் 10 சதவீதம் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென்றும், இதற்காக கட்சியினா் துரிதகதியில் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கடந்த மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

2014 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது.  பாஜகவின் மொத்த வாக்கு 37 சதவீதமாக இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றது முதல் 50 சதவீத வாக்கு வங்கியை வசப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.