27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது: பிரியங்கா சதுர்வேதி

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

News image

பிரியங்கா சதுர்வேதி (கோப்புப்படம்)

Updated On :11 ஜனவரி 2024, 4:26 pm IST

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “என்றென்றும் அவர்களே ஆட்சியில் இருக்கப் போவதில்லை. சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. 

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிர மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.” என்று தெரிவித்தார். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலகி தனி அணி அமைத்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது புதன்கிழமை தீர்ப்பளித்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் தீர்ப்பை ஜனநாயகப் படுகொலை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.