மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிஏஜி நியமன முறைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தற்போதைய சிஏஜி நியமன முறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

Published On :

தற்போதைய சிஏஜி நியமன முறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளரை நியமனம் செய்யும் வழிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அனுபம் குல்ஸ்ரேஷ்தா என்பவர் இந்தப் பொதுநல மனுவை தொடர்ந்துள்ளார். பொதுநல மனுவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தற்போதைய சிஏஜி நியமன முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மத்திய நிதியமைச்சகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகத்துக்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையிலான அமைச்சரவைச் செயலகம் பிரதமரின் ஒப்புதலுக்காக ஒரு பட்டியலை அனுப்புகிறது .

பிரதமர் அந்தப் பட்டியலில் உள்ள நபர்களில் இருந்து யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்கிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து சிஏஜி நியமனம் செய்யப்படுகிறார்.

இந்த நியமன முறையை இன்னும் வெளிப்படையாகச் செய்ய உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.