பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இஸ்ரேலில் வேலைக்குச் செல்ல காத்துக்கிடக்கும் உ.பி. இளைஞர்கள் -மத்திய அரசை விமர்சித்த காங்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக அரசு தெரிவிக்கும் போது, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரேலில் உள்ள வேலை வாய்ப்புக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி அரசை குற்றம் சாட்டியுள்ளது.

News image

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Updated On :27 ஜனவரி 2024, 6:16 pm IST


வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலியாக, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், இஸ்ரேலில் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் வரிசையில் காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கும் போது,  இஸ்ரேலில் உள்ள வேலை வாய்ப்புக்காக மக்கள் ஏன் வரிசையில் காத்துக்கிடக்க வெண்டுமென்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். 

இது குறித்து எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ்,
”போர் நடைபெறும் இஸ்ரேலில்  பணியாற்றி வந்த பாலஸ்தீனிய மக்களுக்கு மாற்றாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் அனைவரும் தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினைகளை களைந்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.