நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மணமான 8 மாதங்களில் பலி: வரதட்சிணை கொடுமை காரணமா?

கணவரின் பெற்றோர் வீட்டில் மனைவி தற்கொலை செய்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:30 pm

கோரக்பூர்: 27 வயதான பெண் மாமனார், மாமியார் வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் சேம்பியர்கஞ்ச் பகுதியில் ஜோதி தேவி என்கிற பெண் வீட்டின் கூரையில் தூக்கிட்டு இறந்ததாக அந்த பகுதி காவல் நிலைய அதிகாரி ராஜ்குமார் அரூரா தெரிவித்துள்ளார்.

மனிஷ் என்பவருடன் எட்டு மாதங்களுக்கு முன்பு ஜோதி தேவிக்கு திருமணம் நடந்துள்ளது. கணவர், மாமனார் மற்றும் மாமியார் தொடர்ந்து வரதட்சிணை கேட்டு ஜோதி தேவியைத் துன்புறுத்தியதாகவும் அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் எனச் சந்தேகிப்பதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.