நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக சீனா பதிவு...

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2025, 10:12 pm IST

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்க வேண்டும் எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து சீன தூதரக செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சீரான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு சீன பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சீன உற்பத்தியானது முழுமையான மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் தொழில்துறை அமைப்பை அடித்தளமாகக் கொண்டது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிலையான முதலீடு மற்றும் புதுமைகளில் வலுவான கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான மேம்பாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 30% வளர்ச்சிக்கு சீனா உதவுகிறது.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு, பலதரப்பு வணிக அமைப்பைப் பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

சீனா - இந்தியா பொருளாதார மற்றும் வணிக உறவு, இருதரப்பு நன்மையை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால், உலக நாடுகள், குறிப்பாக தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமை பறிக்கப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய வளரும் நாடுகளும் ஒன்றிணைந்து சிரமங்களைச் சமாளிக்க வேண்டும்.

வணிகம் மற்றும் வரி மீதான போரில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் உண்மையான பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.