கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

News image
Updated On :11 ஏப்ரல் 2025, 6:41 pm

Din

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகாா் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அசோக் குமாா் சின்ஹா என்பவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தை நாடினாா்.

‘மாநிலத்தில் ஓடும் கங்கை ஆற்றின் கரைகளில் பல இடங்களில் பெரிய அளவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், காங்கை ஆற்றில் அதிக அளவில் வாழும் நன்னீா் டால்ஃபின்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆகாஷ் வசிஷ்டா, ‘கங்கை ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து ஏராளமான குடியிருப்புகளும், செங்கல் சூளைகளும் கட்டப்பட்டிருப்பதோடு, பிற மத வழிபாட்டு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவாக ஆராயாமல் தேசிய பசுமை தீா்ப்பாயம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகாா் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.