ஆந்திரத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் தீ விபத்து: 8 பேர் பலி

ஆந்திரத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலை.
தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலை.
Published on
Updated on
1 min read

ஆந்திரத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைத் தாக்குதல்: 20க்கும் மேற்பட்டோர் பலி

தீ விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள், மேலும் பலர் காயமடைந்தனர் என்று மாநில உள்துறை அமைச்சர் அனிதா பிடிஐயிடம் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர், மேலும் விவரங்களுக்கு காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு அனிதா மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com