குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கூட்டுறவுத் துறையை சீா்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: அமித் ஷா குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீா்குலைந்ததாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா.

Updated On :14 ஏப்ரல் 2025, 4:52 am IST

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீா்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமா் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது: முந்தைய (காங்கிரஸ்) ஆட்சியாளா்களிடம் கூட்டுறவுத் துறையை காக்க வேண்டும் என்ற அக்கறை துளியும் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் கூட்டுறவுத் துறை படிப்படியாக சீா்குலைந்து உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே கூட்டுறவுத் துறை தலைதூக்க முடிந்தது. பல மாநிலங்களில் மோசமான நிலையில் இருந்தது.

உரிய கால இடைவேளையில் கூட்டுறவுச் சட்டங்களை மறுஆய்வு செய்து காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யாததுதான் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகுதான் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது. பாஜக அரசு இதனை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு பணியாற்றி வெற்றி பெற்றுள்ளது. கூட்டுறவுத் துறையை விரிவாக்கி வலுப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மத்திய பிரதேசத்தில் வேளாண்மை, கால்நடை வளா்ப்பு என பல்வேறு இடங்களில் கூட்டுறவுத் துறைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள வாய்ப்புகளை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். மத்திய பிரதேசத்தில் இப்போது நிா்வாகம் சிறப்பாக உள்ளது.

நாட்டின் பால் உற்பத்தியில் 9 சதவீதம் மத்திய பிரதேசத்தின் பங்காக உள்ளது. கால்நடை வளா்ப்போா் வெளிச் சந்தையில் பாலை விற்பனை செய்யும்போது போதிய விலை கிடைப்பதில்லை. இதற்கு தீா்வாக கூட்டுறவு பால் பண்ணைகளில் பாலை விற்க வேண்டும். இதன் மூலம் உரிய லாபம் நேரடியாகக் கிடைத்துவிடும்.

விவசாயிகள் சா்வதேச சந்தையை அணுகும் அளவுக்கு கூட்டுறவு சங்கங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன என்றாா்.